Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #21 Translated in Tamil

تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
وَجَمَعَ فَأَوْعَىٰ
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

Choose other languages: