Quran Apps in many lanuages:

Surah Al-Haaqqa Ayahs #28 Translated in Tamil

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

Choose other languages: